கூட்டணி குறித்து திமுகவுடன் பேசுவோம்: சோனியா
மும்பை:
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக திமுகவுடன் பேசப்போவதாக காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி கூறியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி,
பா.ஜ.க.வை எதிர்த்துப் போராட மதச்சார்பற்ற அணியை அமைப்பது தொடர்பாக திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிபோன்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரைத்தான் பிரதமராக்க வேண்டும் என்ற முடிவை கூட்டணி கட்சிகள் மீது திணிக்கமாட்டோம்.
நான் வெளிநாட்டைச் சேர்ந்தவள் என்று பா.ஜ.க. எழுப்பும் பிரச்சனைக்கு மக்கள் பதில் தருவார்கள் என்றார்.
அண்மையில் சிம்லாவில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் காங்கிரஸ் தலைமையில் மதச் சார்பற்ற கூட்டணிஅமையும் என்று சோனியா அறிவித்திருந்தார். இந் நிலையில் சோனியா காந்தியை பிரதம வேட்பாளராகஅறிவிப்பதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தவைர்கள் பலருக்கு உடன்பாடில்லை.
மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜாபர் ஷெரீப், சோனியாவை பிரதமர்வேட்பாளராக முன்னிறுத்தியதால்தான் எந்தக் கட்சியும் காங்கிரஸூடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை.எனவே சோனியாவை பிரதம வேட்பாளராக அறிவிக்காமல், தேர்தல் முடிந்தபிறகு எம்.பி.க்கள் சேர்ந்து யார்பிரதமர் என்பதை முடிவு செய்யும்படி விடவேண்டும் என்று பகிரங்கமாகவே கூறினார்.
கட்சிக்குள்ளேயே தான் பிரதமர் ஆவதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அறிந்த பின்புதான், தலைமைப் பிரச்சினையைகூட்டணிக் கட்சிகள் மீது திணிக்க மாட்டோம் என்ற நிலைக்கு சோனியா இறங்கி வந்துள்ளார்.