For Daily Alerts
Just In
சாலை விபத்தில் மேல்மருவத்தூர் பக்தர்கள் 4 பேர் பலி
திருவண்ணாமலை:
வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளியைச் சேர்ந்த 4 பக்தர்கள் உள்ளிட்ட 5 பேர் திருவண்ணாமலை அருகே நடந்தசாலை விபத்தில் பலியாயினர்.
வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சிலர் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மாரியம்மன்கோவிலுக்கு இருமுடி கட்டி ஜீப்பில் மேல்மருவத்தூர் சென்றனர்.
அங்கு வழிபாடு முடிந்தவுடன் மீண்டும் நாட்ராம்பள்ளி திரும்பினர். திருவண்ணாமலை அருகே சோமாசிப்பட்டிஎன்ற இடத்தில் அவர்களது ஜீப் வந்தபோது, பாண்டிச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த மினி லாரி ஜீப் மீதுமோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே ஜீப்பில் பயணித்த 4 பேரும், மினி லாரி டிரைவரும் பலியாயினர். 6 பேர்படுகாயமடைந்தனர்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Tuesday, December 30, 2003, 5:30 [IST]