சொர்க்க வாசல் திறப்பு: ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் வெள்ளம்
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தசித்தனர்.
நேற்று வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட்டது. இதையொட்டி வைணவத் திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில், இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
அதிகாலை 4 மணியளவில் நம்பெருமாள், மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார். வேத மந்திரங்கள் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக ரங்கநாதசுவாமி செல்ல பக்தகோடிகளும் பின் தொடர்ந்தனர்.
சொர்க்க வாசல் நிகழ்ச்சியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் கூடினர். இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேபோல, மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கட பெருமாள் கோவில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மதுரை- ஒத்தக்கடை சக்கரத்தாழ்வார் திருக்கோவில் உள்ளிட்ட வைணவத் தலங்களிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.












Click it and Unblock the Notifications