சந்திரிகாவே அமைதி ஒப்பந்தம் செய்யட்டும்: ரணில்
கொழும்பு & இஸ்லாமாபாத்:
விடுதலைப் புலிகளுடன் நாங்கள் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்தை அதிபர் சந்திரிகா குமாரதுங்காகுலைத்துவிட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பு புறநகர் பகுதியில் ஒரு ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது, பாதுகாப்புத் துறையைசந்திரிகா தன்வசம் எடுத்துக் கொண்டது அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கி வைத்துள்ளது.
புலிகளுடன் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் பாதுகாப்புத் துறையை அடிப்படையாகக் கொண்டது என்பதால்,இதுவரை நிகழ்ந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் பயனின்றிப் போய்விட்டது.
ராணுவம் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, புலிகளுடன் செய்துகொண்டஒப்பந்தத்தை மீறுவதாகும். அது மீண்டும் போருக்கே வழிவகுக்கும்.
எனவே, பாதுகாப்புத் துறையை தன்வசம் வைத்துள்ள சந்திரிகாவே புதிதாக ஒரு பேச்சுவார்த்தையைத்தொடங்கவோ அல்லது வேறு ஒரு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தவோ முயற்சி மேற்கொள்ளட்டும் என்றார்.
இந்தியாவுடன் ஒப்பந்தம்: சந்திரிகா
இந் நிலையில, இஸ்லாமாபாத்தில் சார்க் உச்சி மாநாட்டில் கலந்த கொண்ட சந்திரிகா மாநாட்டிற்குப் பின்செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
இலங்கைக்கு இந்தியா சிறந்த முறையில் ராணுவ ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இலங்கை ராணுவத்திற்குஇந்தியா பயிற்சி அளித்து வருகிறது. விரைவில் இந்தியாவுடன் முக்கிய ராணுவ ஒப்பந்தமும் செய்துகொள்ளப்படும்.
விடுதலைப் புலிகளுடனான பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் இந்தியா ஆர்வம் காட்டிவருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications