For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலம் அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 9 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலம் அருகே பெரும் பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 9 பேர் பலியானார்கள். அரசு பஸ்சில் பிரேக் பிடிக்காதகாரணத்தால்தான் இந்த கோர விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

திருப்பதியிலிருந்து பக்தர்களை ஏற்றிக் கொண்டு ஒரு தமிழக அரசுப் பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள வெள்ளியப்பன் கோவில் என்ற மலைப் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, பஸ் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்து, உருண்டது.

படு வேகத்தில் பஸ் கவிழ்ந்ததால், அப்பளமாக நொறுங்கியது. இதில் பஸ்சின் டிரைவர், கண்டக்டர் உள்பட 9 பேர் சம்பவஇடத்திலேயே இறந்தனர். இறந்தவர்களில் 2 பேர் பெண்கள்.

இவர்கள் தவிர மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர். பஸ்சின் பிரேக் பிடிக்காத காரணத்தால்தான் விபத்து நடந்ததாகசம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், பஸ்ஸை டிரைவர் மிக வேகத்தில் ஓட்டியதாலேயே விபத்துநேர்ந்ததாகவும் அப் பகுதியினர் கூறினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X