சேலம் அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 9 பேர் பலி
சேலம்:
சேலம் அருகே பெரும் பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 9 பேர் பலியானார்கள். அரசு பஸ்சில் பிரேக் பிடிக்காதகாரணத்தால்தான் இந்த கோர விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
திருப்பதியிலிருந்து பக்தர்களை ஏற்றிக் கொண்டு ஒரு தமிழக அரசுப் பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள வெள்ளியப்பன் கோவில் என்ற மலைப் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, பஸ் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்து, உருண்டது.
படு வேகத்தில் பஸ் கவிழ்ந்ததால், அப்பளமாக நொறுங்கியது. இதில் பஸ்சின் டிரைவர், கண்டக்டர் உள்பட 9 பேர் சம்பவஇடத்திலேயே இறந்தனர். இறந்தவர்களில் 2 பேர் பெண்கள்.
இவர்கள் தவிர மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர். பஸ்சின் பிரேக் பிடிக்காத காரணத்தால்தான் விபத்து நடந்ததாகசம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், பஸ்ஸை டிரைவர் மிக வேகத்தில் ஓட்டியதாலேயே விபத்துநேர்ந்ததாகவும் அப் பகுதியினர் கூறினர்.