சோனியா வருகிறாரா?: வாசனுக்கே தெரியவில்லை
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 29ம் தேதி சென்னை வருவது குறித்து அதிகாரப் பூர்வமான தகவல் எதுவும்வரவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.
திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதை அடுத்து, இதனைத்தீர்ப்பதற்கு சோனியா காந்தி சென்னை வருவதாக செய்தி வெளியானது. ஆனால், இது குறித்து வாசனிடம்நிருபர்கள் கேட்டபோது,
சோனியாவின் வருகை குறித்து அதிகாரப் பூர்வமான தகவல் எதுவும் எங்களுக்கு வரவில்லை. வந்ததும்உங்களிடம் (நிருபர்களிடம்) தெரிவிப்பேன். கூட்டணி குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் கட்சியின் மேலிடத்தலைவர்கள் மன்மோகன் சிங் மற்றும் கமல்நாத் ஆகியோர் பதிலளித்துள்ள நிலையில், நான் எதுவும் கூற முடியாது.ஏனென்றால், அகில இந்திய காங்கிரஸின் கீழ்தான் தமிழக காங்கிரஸ் செயல்படுகிறது என்றார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் வருவதாக இருந்தால், சத்தியமூர்த்தி பவனில் வரவேற்பு ஏற்பாடுகளும், பலத்தபாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அத்தகைய ஏற்பாடுகள் எதுவும்நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.