திமுக மீது வீண் அவதூறு: கருணாநிதி கண்டனம்
சென்னை:
திமுக மீது வீண் அவதூறை ஏற்படுத்தும் வகையில் சில கட்சிகளும், பத்திரிக்கைகளும் செய்து வெளியிட்டுவருவதாக திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.கவுக்கு பாண்டிச்சேரி தொகுதியை ஒதுக்கியது தொடர்பாக காங்கிரஸ்கட்சியில் அதிருப்தி நிலவி வருகிறது. இதனால் பாண்டிச்சேரியில் மட்டும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடலாம்என்று செய்திகள் கிளம்பியுள்ளன.
இந் நிலையில் இன்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு, புதுவை மாநிலங்களில் உள்ள 40தொகுதிகளிலும் எத்தனை கட்சிகள் வேண்டுமானாலும், எத்தனை பேர் வேண்டுமானாலும் போட்டி போடலாம்என்று தேர்தல் ஆணையம் தெளிவாகக் கூறியுள்ளது.
இப்படி விதிமுறைகள் தெளிவாக இருந்தும், யாருடைய உரிமையையோ திமுக பறித்து விட்டது போல சிலர் பேசிவருவதும், பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுவதும் கடும் கண்டனத்துக்குரியது, இது வீண் அவதூறாகும்.
அணியாகவோ, தனியாகவோ யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். தனியாக போட்டியிடுவதை யாராலும்தடுக்க முடியாது. சில கட்சிகள் தவிர சில ஏடுகளும் இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்கி, கலகமூட்ட முனைகின்றன.
இப்படிப்பட்டவர்கள் சட்டரீதியான நடவடிக்கைக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று கருணாநிதிஎச்சரித்துள்ளார்.