For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கைவிடப்பட்டது தனி நீதிமன்றத்தின் மூடுவிழா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட கடந்த அதிமுக ஆட்சி கால அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான வழக்குகளை விசாரித்து வந்ததனி நீதிமன்றத்தின் ஆயுட்காலம் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 3 தனி நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. முதல்வர் ஜெயலலலிதா அவரது அமைச்சர்கள்,அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகள் இங்கு விசாரிக்கப்பட்டன.

அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதில் 2 நீதிமன்றங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன.

இந் நிலையில், கடைசியாக இயங்கி வரும் தனி நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் இன்றுடன் (31ம் தேதி) ஓய்வுபெறுவதையொட்டி நேற்றுடன் தனி நீதிமன்றத்தை கலைத்து விடலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்பரிந்துரைத்திருந்தது.

ஆனால், திடீரென்று இந்த பரிந்துரை வாபஸ் பெறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் ஆயுட் காலம் ஜூன் மாதம் வரை இருப்பதால்அதுவரை தனி நீதிமன்றத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தைக் கலைக்கும் பரிந்துரையை தமிழக அரசு ஏற்காததால், நீதிமன்றத்தின் ஆயுட் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தின் புதிய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்ற உத்தரவில்,

இனிமேல் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜெயபால், தனி நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் கூடுதல் பொறுப்புவகிப்பார். ஜூன் 30ம் தேதி வரை இந்தத் தனி நீதிமன்றம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X