அத்வானிக்கு இன்று ஜெ. விருந்து
சென்னை:
இன்று சென்னை வரும் துணைப் பிரதமர் அத்வானிக்கு முதல்வர் ஜெயலலிதா விருந்து கொடுக்கிறார். அப்போதுவரும் தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து இருவரும் பேச்சு நடத்தவுள்ளனர்.,
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஒரு விழாவில் பங்கேற்க வரும் அத்வானிக்கு தனது போயஸ் கார்டன்இல்லத்தில் இந்த இரவு விருந்தை அளிக்கிறார் ஜெயலலிதா.
அதிமுக-பாஜக குழுக்கள் சந்திப்பு:
இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக மற்றும் பா.ஜ.க. தேர்தல் குழுக்கள்நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தின.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக தேர்தல் குழுவும்,சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பா.ஜ.க. தேர்தல் குழுவும் இன்று சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ளஅதிமுக தலைமை அலுவலகத்தில் சந்தித்துப் பேசின.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்தக் கூட்டம் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசியராதாகிருஷ்ணன், பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. மீண்டும் ஓரிரு நாட்களில் சந்திக்கவுள்ளோம். அதற்குப்பிறகுதான் தொகுதிகள் இறுதி செய்யப்படும் என்றார்.
அதிமுக பொதுக் குழு தேதி மாற்றம்:
இதற்கிடையே அதிமுக பொதுக் குழு, செயற்குழுக் கூட்டங்கள் பிப்ரவரி 3ம் தேதிக்குப் பதிலாக 4ம் தேதி மாலைநடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக நிர்வாகிகளுடன் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சென்னையை அடுத்த கொளப்பக்காத்தில் நேர்காணல்நடத்தினார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து வரும் பிப்ரவரி 3ம் தேதி கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார்.
இக் கூட்டத்தில் பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றிய அறிவிப்பையும் ஜெயலலிதா வெளியிடுவார்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் இக் கூட்டத்தை 4ம் தேதிக்கு ஜெயலலிதா ஒத்தி வைத்துள்ளார்.