எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் திருமாவளவன்
சென்னை:
திமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்ட விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயாலாளரானதிருமாவளவன், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமாசெய்துள்ளார்.
சட்டசபைக்குச் சென்று சபாநாயகர் காளிமுத்துவைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை திருமாவளவன்கொடுத்தார்.
2001ம் ஆண்டு நடந்த, கடந்த சட்டமன்றத் தேர்தலில் கடலூர் மாவட்டம் மங்களூர் தனித் தொகுதியில் திமுககூட்டணி சார்பில் போட்டியிட்டார் திருமாவளவன். திமுக சின்னத்திலேயே நின்ற அவர் வெற்றியும் பெற்றார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு கடலூர் தொகுதியைத் தர வேண்டும் என திமுகவிடம் கேட்டார். ஆனால்,சீட் தரப்படாததால் நேற்று திமுக கூட்டணியைவிட்டு விலகினார். அவருடன் புதிய தமிழகம் கட்சியின் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமியும் விலகி, இருவரும் மூன்றாவது அணி அமைத்துள்ளனர்.
இதையடுத்து திமுக சார்பில் தனக்குக் கிடைத்த எம்.எல்.ஏ. பதவியை இன்று திருமாவளவன் ராஜிணமா செய்தார்.தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அனுப்பப் போவதாக செய்தியாளர்களிடம்திருமாவளவன் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக தலைவர் கருணாநிதி தலித் மக்களை இழிவுபடுத்தி விட்டார். ஜாதிவெறியைத் தூண்டி வரும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, அரவணைக்கும் அவர் விடுதலைச்சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய தலித் கட்சிகளை இழிவுபடுத்தி விட்டார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடும். வேறு சில கட்சிகளும் எங்களதுகூட்டணியில் சேர முன்வந்துள்ளன. அவர்களையும் சேர்ப்பது குறித்து பரிசீலிப்போம் என்றார்.
நாளை சட்டமன்றம் கூடவுள்ள நிலையில் திருமாவளவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சபாநாயகருடன் சேர்த்து முதல்வர் ஜெயலலிதாவுக்கும் தனது கடிதத்தை அனுப்புவதன் மூலம் அதிமுகவுடனானஉறவுக்கு திருமாவளவன் அடிபோடுவதாகக் கருதப்படுகிறது. மக்களவைத் தேர்தலின்போது, திருமாவளவன்ராஜினாமா செய்த மங்களூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications