மதம் மாறினாலும் எஸ்.டி. சலுகை தொடரும்: உச்ச நீதிமன்றம்
டெல்லி:
மதம் மாறினாலும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளசலுகைகள் தொடரும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன்னைக் கற்பழித்தவருக்கு எதிராக வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் புகார்செய்தார்.
ஆனால், அந்தப் பெண் பழங்குடி இனத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதால், தனக்கு எதிராகவன்கொடுமை சட்டத்தின்கீழ் புகார் அளிக்க உரிமை கிடையாது என்று கற்பழித்த அந்த நபர் மாவட்டநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து மாவட்ட நீதிமன்றத்தில் அந்தப் பெண்ணிற்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர்உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் சின்ஹா, கபாடியா ஆகியோர்அடங்கிய பெஞ்ச்,
பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் பிற மதத்துக்கு மாறினாலும், அவர்கள் எஸ்.டி. என்ற அந்தஸ்தை இழக்கமாட்டார்கள். எனவே இவ்வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் வன்கொடுமை சட்டத்தின்கீழ் புகார் கொடுக்க உரிமைஉள்ளது என்ற தீர்ப்பு அளித்தது.












Click it and Unblock the Notifications