கோவை, தென்காசி இந்திய கம்யூ. வேட்பாளர்கள் முடிவு
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவுள்ள கோவை, தென்காசி (தனி) தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்தேர்வு செய்யப்பட்டு கட்சி மேலிடத்தின் ஒப்புதலுக்காக பெயர்கள் அனுப்பப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவை மற்றும் தென்காசி (தனி) தொகுதிகளில்போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்ஆலோசனைக் கூட்டம் மாநில செயலாளர் நல்லகண்ணு தலைமையில் நடந்தது.
கூட்டத்தின்போது கோவை தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பராயன், தென்காசி தொகுதியில், தூத்துக்குடிமாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் அப்பாத்துரை ஆகியோரை நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.இந்தப் பெயர்களை கட்சியின் உயர் மட்டக் குழுவிற்கு (பொலிட்பீரோ) அனுப்பவும் கட்சி முடிவு செய்துள்ளது.ஒப்புதல் கிடைத்தவுடன் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.