தமிழக லாரிகளை தடுத்து கேரளாவில் போராட்டம்
பாலக்ணீாடு:
கேரளாவைச் சேர்ந்த ஜலசம்ரக்ஷனா சமிதி என்ற அமைப்பு பாலக்காட்டிற்குள் நுழைந்த தமிழக லாரிகளை தடுத்துநிறுத்தி போராட்டம் நடத்தியது.
இந்த அமைப்பின் பாலக்காடு பிரிவினர் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்திலிருந்து பாலக்காட்டுக்கு கூடுதல்தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதை வலியுறுத்தி, தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு வந்த லாரிகளை, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுத்துநிறுத்தி சிறை வைத்தனர். கோபாலபுரம், வண்டழி, வேலந்தாவளம், வண்டித்தாவளம் உள்ளிட்ட பல பகுதிகளில்இதனால் பதட்டம் நிலவியது. போலீஸார் விரைந்து வந்து போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினர்.இதையடுத்து மாலையில் லாரிகளை மீண்டும் செல்ல அனுமதித்தனர்.
பாலக்காட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கவும், பாலக்காட்டுக்கு வரும் அமைச்சர்களைப்புறக்கணிக்கவும் இந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications