மக்களவைத் தேர்தல் ஆலோசனை: தலைமைச் செயலாளர் டெல்லி பயணம்
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தல் தேதி தொடர்பான தலைமை தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கதமிழகத் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், டிஜிபி வைகுந்த் ஆகியோர் இன்று காலை டெல்லி புறப்பட்டுச்சென்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், தேர்தல்அதிகாரிகள், டிஜிபிக்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டத்தை இன்று தலைமைத் தேர்தல் ஆணையம்கூட்டியுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 3 தேர்தல் ஆணையர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
இதில் பங்கேற்பதற்காக தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், டிஜிபி வைகுந்த் உள்ளிட்ட அதிகாரிகள்டெல்லி சென்றனர். தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியான மிருத்யுஞ்சய் சாரங்கி நேற்றே டெல்லிசென்றுவிட்டார்.
இன்று பிற்பகல் தமிழக அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தனியே ஆலோசனை நடத்தவுள்ளனர்.












Click it and Unblock the Notifications