வீரப்பன் சரணடைந்தால் வரவேற்போம்: ஐ.ஜி. விஜயக்குமார்
ஈரோடு:
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய முன்வந்தால், அதற்கான முயற்சிகள் நடந்தால் அதை வரவேற்பதாக சிறப்பு அதிரடிப்படைதலைவர் ஜ.ஜி. விஜயக்குமார் கூறியுள்ளார்.
வீரப்பனை சுட்டுப் பிடிப்போம் என்று மட்டுமே இதுவரை அதிமுக அரசும், தமிழக காவல்துறையும் கூறி வந்தது. இந் நிலையில்விஜயக்குமார் வீரப்பன் சரணடைவதை வரவேற்பேன் என்று கூறியிருப்பது புதிய திருப்பமாக கருதப்படுகிறது.
ஈரோட்டில் நடந்த விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த விஜயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், வீரப்பனைஉயிருடனோ, பிணமாகவோ அல்லது சரணடைய வைத்துப் பிடிப்பதுதான் எங்களது நோக்கம். மொத்தத்தில் அவன் பிடிபடவேண்டும்.
அவனை சரணடைய வைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவோ, அதற்கான முயற்சிகள் நடந்தால் அதை ஆதரிக்கவோ நாங்கள்தயங்கியதே இல்லை. அவனது மனைவி முத்துலட்சுமியின் மூலம் வீரப்பனை சரணடைய வைக்க நடக்கும் முயற்சிகள் குறித்துஎனக்குத் தெரியாது என்றார் அவர்.