காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு எப்போது?
தஞ்சாவூர்:
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு இந்த ஆண்டின் இறுதியில் வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசின் காவிரிதொழில்நுட்பப் பிரிவின் தலைவர் பேராசியர் மோகனகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய மோகன கிருஷ்ணன், காவிரி நடுவர் மன்றத்தில் நடந்து வந்தவிவாதங்கள் முடிந்து விட்டன. இந் நிலையில் தீர்ப்பு மட்டுமே பாக்கி உள்ளது.
தற்போது தண்ணீரை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பதை நடுவர் மன்றம் தெரிவிக்க வேண்டிய நிலையில்உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்திற்கு சாதகமாகவே தீர்ப்பு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
காவிரி நடுவர் மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்துக்கு கர்நாடகம் ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைவழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பையே கர்நாடகம் மதிப்பதில்லை என்பதும்குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இறுதித் தீர்ப்பு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications