யாழ்பாண சிறையில் 67 தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்
ராமநாதபுரம்:
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 67 தமிழக மீனவர்களும் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர் சங்கத் தலைவர் அருளானந்தம் இத் தகவலைத்தெரிவித்தார். தங்களை உடனடியாக விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்பக் கோரி செவ்வாய்க்கிழமை முதல்இவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம் தவிர, அனுராதபுரம், நெகம்போ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைகளில் மேலும் பலதமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அருளானந்தம், ரூ. 5 கோடி மதிப்புடைய தமிழகமீனவர்களின் இயந்திரப் படகுகள் இலங்கை அதிகாரிகளிடம் சிக்கி துருப்பிடித்துக் கொண்டிருப்பதாகவும்கூறினார்.
மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக தலையிட்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் கடல்பகுதியில் பெரும் மோதல் நடக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications