அடங்கினர் நாகர்கோவில் காங்கிரசார்: கம்யூ. வேட்பாளரை ஆதரிக்க முடிவு
நாகர்கோவில்:
நாகர்கோவில் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கக் கோரி மாஜி எம்.பி. டென்னிஸ் தலைமையில் போராட்டம்நடத்தி வந்த கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸார் கட்சித் தலைமையின் கடும் எச்சரிக்கையை அடுத்து தற்போதுஅடங்கியுள்ளனர்.
தங்களது அதிருப்தியை விலக்கிக் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில்ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் நாகர்கோவில் ஆகியதொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் தொகுதியை எதிர்பார்த்திருந்த டென்னிஸ் தலைமையிலானகாங்கிரஸார் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து நாகர்கோவில் தொகுதியை மீண்டும் காங்கிரஸுக்கு வழங்கக் கோரி வாசன் கொடும்பாவி எரிப்புஉள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இதனால் எரிச்சலடைந்த கருணாநிதி காங்கிரசாரை கண்டித்து இருஅறிக்கைகள் வெளியிட்டார்.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களும் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காங்கிரஸ் தலைவர்களிடம்பேசினர். இயைடுத்து டென்னிஸ் கோஷ்டிக்கு டெல்லியில் இருந்து கடும் எச்சரிக்கை வந்தது.
போராட்டத்தை நிறுத்திவிட்டு உடனடியாக கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தைத்தொடங்காவிட்டால் ஒட்டுமொத்தமாக கட்சியை விட்டு கல்தா தரப்படும் என்று கூறப்பட்டது.
இதையடுத்து அக் கும்பல் அதிருப்தியை விலக்கிக் கொண்டு, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரிக்க முடிவுசெய்துள்ளனர்.
இதன் மூலம் நாகர்கோவில் பிரச்சனைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்நிம்மதியடைந்துள்ளது.
ஆனால், பாண்டிச்சேரி விவகாரம் தொடர்ந்து கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications