தா.கி. கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான சுமாைன் சேட்என்பவருக்கு மதுரை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
தா.கி கொலை வழக்கில் மு.க.அழகி உள்பட மொத்தம் 13 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இதில் தா.கி. வெட்டிக்கொன்ற முக்கிய குற்றவாளியாக சுலைமான் சேட் மீது போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனால் சுலைமான் சேட் மற்றும் முபாரக் மந்திரி ஆகியோரைத் தவிர மற்ற 11 பேருக்கு மட்டுமே மதுரைநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.
இந் நிலையில் முபாரக் மந்திரி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அனுகினார். அவருக்கு அங்கு ஜாமீன்வழங்கப்பட்டது.
அதே போல சுலைமான் சேட் தனக்கு ஜாமீன் கோரி மீண்டும் மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்தார்.மனுவை விசாரித்த நீதிமன்றம் சேட்டுக்கு ஜாமீன் வழங்கியது.












Click it and Unblock the Notifications