பா.ஜ.க. வேட்பாளர்கள் நாளை மறுதினம் அறிவிப்பு
சென்னை:
அதிமுக போட்யிடும் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் 26ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் வட சென்னை, தர்மபுரி, நீலகிரி, கோவை, சிதம்பரம், நாகர்கோவில் மற்றும் பாண்டிச்சேரிதொகுதிகளை பா.ஜ.கவுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது.
இதில் கோவையில் மாநில பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் மத்திய அமைச்சர்பொன்.ராதாகிருஷ்ணன், நீலகிரியில் இப்போதைய எம்.பி. மாஸ்டர் மாதன் ஆகியோர் போட்டியிடுவதுகிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
அதே போல பாண்டிச்சேரியில் லலிதா குமாரமங்கலம் என்பதும் உறுதியாகிவிட்டது.
நீலகிரியை மாதனுக்குத் தருவது குறித்து அதிமுகவுக்கு வருத்தம் இருந்தாலும், அந்தத் தொகுதியில்பெரும்பான்மையாக வசிக்கும் படுகர் இனத்தைச் சேர்ந்த வேறு எந்த பிரபலமும் பா.ஜ.கவில் இல்லை. இதனால்அவரையே நிறுத்த வேண்டிய நிலையில் பா.ஜ.க உள்ளது.
இந் நிலையில் பிற தொகுதிகளில் தான் யாரைப் போடுவது என்ற பெரும் குழப்பத்தில் பா.ஜ.க. உள்ளது. திருச்சிகிடைக்காததால் சுகுமாறன் நம்பியார் போட்டியிட மறுத்துவிட்டார். வட சென்னை என்பதால் இல.கணேசன்ஒதுங்கிவிட்டார். சிவகங்கை கிடைக்காததால் எச்.ராஜா போட்டியிடவில்லை.
இந் நிலையில் வேட்பாளர்கள் தேர்வு நடந்து கொண்டுள்ளது. வரும் 1ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தைத்தொடங்குவதால் அதற்குள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க. உள்ளது.
இதையடுத்து நாளை மறுநாள் தமிழக பா.ஜ.கவின் நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில்கட்சியின் தலைவர் வெங்கைய்யா நாயுடுவும் பங்கேற்க உள்ளார். இதனால் இக் கூட்டத்திலேயே 7வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.
இல.கணேசனுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், ரிசர்வ் தொகுதியான சிதம்பரத்தில் முன்னாள் மாநிலத் தலைவரானகிருபாநிதியே நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. ஏனெனில் அங்கு நிற்க வேறு எந்த தலித் தலைவரும் பா.ஜ.கவில்இல்லை.
ஆனால் வட சென்னை, தர்மபுரி தான் பா.ஜ.கவுக்கு பெரும் சவாலாக உள்ளது. இரு தொகுதிகளிலும்வேட்பாளர்களாக பா.ஜ.கவில் முக்கியஸ்தரே இல்லை. இதனால் குமரி அனந்தனின் மகளான டாக்டர் தமிழிசைவட சென்னையில் இறக்கிவிடப்படலாம்.
தர்மபுரியில் வேறு ஆளே இல்லாததால் பேசாமல் சுகுமாறன் நம்பியாரை நிறுத்திவிடலாமா என்றும்ஆலோசிகப்பட்டு வருகிறது. எப்படி இருந்தாலும் நாளை மறுதினம் பட்டியல் வெளியாகிவிடும்.