பி.இ- எம்.பி.பி.எஸ்- ஏப்ரல் 24, 25ல் நுழைவு தேர்வு
சென்னை:
தொழில் படிப்புகளில் சேர விரும்புவோருக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 24, 25ம் தேதிகளில் நடைபெறும் என்றுஅண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது:
பொறியியல். மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் ஆகியவற்றுக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதம்24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும். மொத்தம் 39 நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெறும்.
இந்த ஆண்டு புதிதாக அருப்புக்கோட்டை, ஆவடி, நெய்வேலி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தேர்வுநடைபெற உள்ளது. 24ம் தேதி காலை உயிரியல் மற்றும் தொழிற்படிப்பு பாடத்திற்கான தேர்வுகளும், அன்றுமதியம் இயல் அறிவியல் பாடத்திற்கான தேர்வுகளும் நடைபெறும்.
25ம் தேதி காலை கணக்கு மற்றும் தொழிற்படிப்புக்கான பாடங்களும் நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள்வருகிற 27ம் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பங்களை வாங்க கடைசி நாள் மார்ச் 20ம் தேதியாகும்.
விண்ணப்பங்களை ஆன்லைன் மற்றும் தபால் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்றார் பாலகுருசாமி.