இலங்கையில் ஈ.பி.டி.பி. தொண்டர் சுட்டுக் கொலை
கொழும்பு:
இலங்கையில் ஈழ மக்கள் விடுதலைக் கட்சியின் தொண்டர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன்மூலம் இலங்கை மக்களவைத் தேர்தல் தொடர்பான வன்முறையில் பலியான தமிழர்களின் எண்ணிக்கைஇரண்டாக உயர்ந்துள்ளது.
பிரதமர் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பில் தேர்தலில் போட்டியிட்ட சின்னதம்பிசுந்தரபிள்ளை நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு அமெரிக்காவிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்தக் கொலைக்கு புலிகளைக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா, புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு போலசெயல்படுவதாகக் கூறியுள்ளது.
இந் நிலையில் நேற்றிரவு மட்டக்களப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த அக்கட்சியின் தொண்டரான பொன்னையா யோகேந்திரன் (28) சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலையை விடுதலைப் புலிகள் தான் செய்ததாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் எதிரிகளை கொன்று குவித்துவிட்டு தமிழ் மக்களின் ஒரேபிரதிநிதியாக வன்முறை மூலம் அங்கீகாரம் பெற புலிகள் இயக்கம் முயல்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த இரு கொலைகளுக்கும் புலிகளோ அல்லது வேறு இயக்கமோ இதுவரை பொறுப்பேற்கவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications