மதிமுக பிரமுகர் மனைவியிடம் அத்துமீறிய அதிமுகவினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை ஆலந்தூர் நகர மதிமுக பிரமுகரின் மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற அதிமுக பிரமுகரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஆலந்தூர் நகர 2வது வட்ட மதிமுக செயலாளராக இருப்பவராக இருப்பவர் முரளி. இவர் பருத்திவாக்கம் தெருவில் முன்னாள் திமுக அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்திருந்தார்.

இந்த விளம்பரத்தை அழித்துவிட்டு, அப்பகுதி அதிமுக செயலாளர் மேகநாதன் இரட்டை இலை சின்னத்தை வரைந்தார். இதை முரளி தட்டிக் கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் நடந்த தகராறில் மேகநாதன், தனது கட்சியினரான வடிவேலு,ராஜா, சண்முகம், மோகன், சொக்கலிங்கம் ஆகியோருடன் சேர்ந்து முரளியின் கத்தியில் குத்தினார்.

இதைத் தடுக்க வந்த முரளியின் மனைவி ரமணியை (35) சேலையைப் பிடித்து இழுத்து மானப்பங்கப்படுத்த முயற்சித்துள்ளனர். இது தொடர்பாக முரளியும், ரமணியும் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

தற்போது போலீஸார் மேகநாதன் உள்ளிட்ட 5 பேரைத் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+