For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமேஸ்வரம் கடலில் மீன் பிடித்த 25 அகதிகள் கைது

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் கடல் பகுதியில் போலி மீனவர் அடையாள அட்டைகளுடன், தடை செய்யப்பட்டவலைகளுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 இலங்கை அகதிகள் மற்றும் 26 பேரை போலீஸார்கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளுடன் மீன் பிடிப்பதாகஅதிகாரிகளுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து திடீர் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது இந்த வகை வலைகளுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த 51 பேர் கைது செய்யப்பட்டனர்.

மண்டபம் முகாம் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட அவர்களிடம் போலீஸார் நடத்தியவிசாரணையின்போது, அவர்களில் 25 பேர் சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அகதிகள் முகாமைச்சேர்ந்த இலங்கை அகதிகள் என்பது தெரியவந்தது.

மற்ற 26 பேரும் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இந்த 51 பேரும் போலி மீனவர் அடையாள அட்டைகளுடன் மீன் பிடித்து வந்துளளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X