செட் டாப் பாக்ஸ் திட்டம் தொடரலாம்: உயர் நீதிமன்றம்
சென்னை:
செட் டாப் பாக்ஸ் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
விரும்பிய கட்டண தொலைக்காட்சி அலைவசைகளை செட் டாப் பாக்ஸ் கருவி மூ லம் கட்டணம் செலுத்திப்பார்க்கும் திட்டம் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் சென்னைநகரில் மட்டுமே முழுமையாக அமல்படுத்தப்பட்டது.
செட் டாப் பாக்ஸ் திட்டம் காரணமாக சென்னையில் ரூ. 500 வரை கேபிள் டிவிக்காக செலவு செய்து வந்தவர்கள்மாதம் ரூ. 100 வரை மட்டுமே செலுத்தும் வசதி ஏற்பட்டது. இருப்பினும் கட்டணச் சேனல்களாக இருந்து வரும்பல்வேறு இந்தி மொழி சோனல்களும், தேவையில்லாத பல்வேறு சேனல்களையும் மக்கள் நிராகரிக்கும் நிலைஏற்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் செட் டாப் பாக்ஸ் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதனால்பணம் கட்டி செட் டாப் பாக்ஸ் கருவியை வாங்கியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து செட் டாப் பாக்ஸ்உபயோகிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
தங்களது மனுவில், செட் டாப் பாக்ஸ் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால்ஆயிரக்கணக்கான ரூபாய் கட்டி செட் டாப் பாக்ஸ் வாங்கியவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலைஏற்பட்டுள்ளது. மேலும் கேபிள் டிவிக்கு மாதந்தோறும் அதிக அளவில் கட்டணம் கட்டும் சூழ்நிலை மறுபடியும்ஏற்படும்.
எனவே செட் டாப் பாக்ஸ் திட்டத்தை ரத்து செய்ததற்கு தடை விதிக்க மனுவில் கோரியிருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி ரவிராஜ பாண்டியன், மத்திய அரசு செட் டாப் பாக்ஸ் திட்டத்தை ரத்து செய்ததற்குஇடைக்காலத் தடை விதித்தார். இந்தத் திட்டம் சென்னை நகரில் தொடரலாம் என்றும் அவர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications