தொலைபேசிகள் ஒட்டுகேட்பு: திமுக கூட்டணி கட்சிகள் புகார்!
சென்னை:
எதிர்க் கட்சித் தலைவர்களின் தொலைபேசிகளை மத்திய, மாநில அரசுகள் ஒட்டுக் கேட்டு வருவதாகவும், அதுகுறித்து ஜனாதிபதியிடம் புகார் தரப் போவதாகவும் திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இந்தப் புகார் கூறப்பட்டது.இது தொடர்பாக அக் கட்சிகள் நிறைவேற்றிய தீர்மானத்தில்,
எதிர்க் கட்சித் தலைவர்கள், எதிர்க் கட்சி அலுவலகங்களை மத்திய, மாநில அரசுகள் ஒட்டு கேட்பதுஅநாகரீகமானது. சட்ட விரோதமானது. எனவே, தொலைபேசிகளை ஒட்டுகேட்கும் இரு அரசுகளுக்கும் இக்கூட்டம் கண்டனம் தெரிவிக்கிறது.
மேலும் இது குறித்து குடியரசுத் தலைவரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்படும் என்று கூறப்பட்டுள்ள்ளது.
இன்னொரு தீர்மானத்தில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை வன்முறையைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளதால்அது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications