விடுதலை சிறுத்தைகள் மாநாட்டை எதிர்த்து வழக்கு
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சேலம் நகரில் நடைபெறவுள்ள இந்து பண்பாடு எதிர்ப்பு மாநாட்டுக்குத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வருகிற 14ம் தேதி சேலம் நகரில் இந்துத்துவ பண்பாடு எதிர்ப்பு மாநாடுநடைபெறவுள்ளது. இதில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட மக்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் இந்த மாநாட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த நாகராஜ்என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில், இந்தியாவில் இந்துக்கள்தான்பெரும்பான்மையான சமூகத்தினர். இங்கு 85 சதவீதத்திற்கும் மேலாக இந்துக்கள் வசிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்துக்களின் கலாச்சார, பாரம்பரிய பண்பாடுகளை எதிர்த்து மாநாடு நடத்துவதுஆரோக்கியமானதல்ல. இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள திருமாவளவன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்.அவர் இந்துக்களுக்கு எதிராக மாநாடு நடத்தினால் அது இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும்.
சட்டம் ஒழுங்குக்குப் பாதகம் விளைவிக்கக் கூடிய வகையில் உள்ள இந்த மாநாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications