தேர்தல் பிரச்சாரம்: "கொழாய்" கட்டாதீங்கப்பா!
சென்னை:
பிளஸ்டூ மற்றும் பத்தாவது வகுப்புத் தேர்வுகள் நடைபெறவுள்ளதால், தேர்தல் பிரச்சாரத்தின் போது மைக் செட்என்று அழைக்கப்படும் காதைக் கிழிக்கும் அளவுக்கு ஒலி எழுப்பும் குழாய் ஒலிபெருக்கிகளை தவிர்க்குமாறுசென்னை மாநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வுகள் நாளை தொடங்கி வருகிற 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன் பின்னர்ஏப்ரல் மாதத்தில் பத்தாவது வகுப்புத் தேர்வுகள் தொடங்கவுள்ளன.
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ளதால், தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள்தீவிரமாகியுள்ளன. இந் நிலையில் சென்னை மாநகர காவல்துறை விடுத்துள்ள ஒரு அறிக்கையில், பிளஸ் டூ மற்றும்பத்தாவது வகுப்புத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதனால் பொது இடங்களில் காவல்துறை விதிமுறைக்குஉட்பட்டே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்.
குழாய் ஒலிபெருக்கிகளை கூடுமான வரை தவிர்ப்பது நலம். இதை மீறுவோர் குறித்து பொதுமக்களும்,மாணவர்களும் போலீஸாரிடம் புகார் கொடுக்கலாம். தவறு செய்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications