ஜெவுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு: இளங்கோவன்
சென்னை:
தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு விசாரணை தொடர்பாக முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் இன்று சென்னை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல் வளை நெரிக்கப்படுவதாக இளங்கோவன் பேசியது முதல்வர் ஜெயலலிதாவின்புகழுக்கு களங்கம் விளைவித்துவிட்டதாகக் கூறி அவர் மீது அரசு வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதையொட்டி இளங்கோவன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.இதையடுத்து நீதிபதி ராமலிங்கம் விசாரணையை ஜூன் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
வெளியே வந்த இளங்கோவன் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு ஜனநாயக முறைப்படிசெயல்படவில்லை என்று கூறியதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, இன்னும் எத்தனைவழக்குகள் போட்டாலும் அதை சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.
சோனியா காந்தி இந்தியப் பிரஜை தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்ட பிறகு அவர் மீது சேற்றைஅள்ள வீசி வருகிறார் ஜெயலலிதா. இது நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குதாக்கல் செய்வேன். என்றார்.
இளங்கோவன் மீது இதுவரை மொத்தம் 16 அவதூறு வழக்குகளை தமிழக அரசு போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.