ஜெ. பிரசாரம் துவக்கம்
சென்னை:
அதிமுக மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று முதல் தனது 2 மாத பிரச்சாரத்தைசென்னையிலிருந்து தொடங்குகிறார். கடற்கரைச் சாலையில் அவர் பிரசாரம் தொடங்குவதையொட்டி மெரீனாகடற்கரையில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
இன்று மாலை ஜெயலலிதாவின் பிரச்சாரம் தொடங்குகிறது. இன்று காலை முதலே அப்பகுதியில் அதிமுகவினர்குவிந்து வருகின்றனர். அவர்களை குஷிப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைநிகழ்ச்சிகள், பாட்டுக் கச்சேரிகள் என அப்பகுதியே களை கட்டியுள்ளது.
பிரசாரம் தொடங்கும் பெசன்ட் சாலை, கடற்கரைச் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள மேடை அருகேஅதிமுகவினர் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அங்கு போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, மெரீனா கடற்கரை சாலையான காமராஜர் சாலை முழுவதிலும் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு பிரசாரத்தைத் தொடங்கும் ஜெயலலிதா, மத்தியசென்னை வேட்பாளர் பாலகங்கா, தென் சென்னை வேட்பாளர் பாதர் சையத் ஆகியோரை ஆதரித்துப் பிரசாரம்செய்கிறார்.
இதையடுத்து நொச்சிக்குப்பம், சத்யா ஸ்டுடியோ, மத்திய கைலாஷ், ஹால்டா, கிண்டி ரயில் நிலையம் ஆகியஇடங்களில் அவருக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு கொடுக்கிறார்கள். சென்னையில் தனது பிரச்சாரத்தைமுடித்துக் கொண்டு மதுராந்தகம் செல்கிறார் ஜெயலலிதா. அங்கு அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்நடக்கிறது.
நாளை சென்னையில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை ஆகியஇடங்களில் பிரச்சாரம் செய்து விட்டு வேலூர் செல்கிறார்.
வரவேற்க தயாராகும் வேலூர்:
வேலூர் நகரில் பிரச்சாரம் செய்ய வருகை தரவுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கமாவட்ட அதிமுகவினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
வேலூர் நகரில் எங்கு பார்த்தாலும் ஜெயலலிதாவின் போஸ்டர்கள், பேனர்கள், கட் அவுட்களாக காணப்படுகிறது.இத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் பையூர் சந்தானத்தை ஆதரித்து வேலூர், கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டத்திலும் பேசவுள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதா வருகையொட்டி வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications