தமிழகத்தில் இந்த ஆண்டும் கடும் வெயில் கொளுத்தும்: வானிலை மையம்
சென்னை:
தென்மேற்குப் பருவ மழையும், வட கிழக்குப் பருவ மழையும் எதிர்பார்த்த அளவு பெய்யாததால் கடந்தஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் வெயில் கொடுமை அதிமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதை உறுதிப்படுத்துவது போல், மார்ச் தொடக்கத்திலேயே 90 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்துகிறது.கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி நுங்கம்பாக்கத்தில் 91.4 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. ஆனால் இந்தஆண்டு அதைவிட அதிகமாக 92.14 டிகிரி வெப்பம் கடந்த 4ம் தேதியே பதிவாகிவிட்டது. அதே நாளில்மீனம்பாக்கத்தில் 93.38 டிகிரி பதிவாகியுள்ளது.
தற்போது இயல்பாக இருக்கவேண்டிய வெப்ப அளவை விட, அதிகமாகவே மதுரை, கோயம்புத்தூர், சேலம்,கொடைக்கானல், வேலூர் ஆகிய இடங்களில் வெப்பம் பதிவாகி வருகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி கூறுகையில்,
கடந்த ஆண்டு மே மாதம் சென்னையில் அதிகபட்சமாக 113 டிகிரி பதிவானது. இந்த ஆண்டும் கடந்த ஆண்டைப்போலவே வெயில் அதிகமாகவே இருக்கும். கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருந்து காற்றில் ஈரப்பதம்இருந்தால் சாதகமான சூழ்நிலையில் இடியுடன் மழை பெய்யும்.
கோடை காலங்களில் கடந்த ஆண்டுகளில் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.ஆனால் எதிர்பார்த்த அளவு பெய்யுமா என்பது கேள்விக்குறிதான் என்று கூறியுள்ளார்.