பிளஸ் டூ தேர்வுகள் இன்று தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வுகள் இன்று தொடங்கியது.
மொத்தம் 85 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 5.4 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வின்போது பிட் அடிப்பது, காப்பி அடிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு பிடிபட்டால் 5 ஆண்டுகளுக்குத் தேர்வுஎழுத தடை விதிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது. பிட் அடிப்பவர்களைப் பிடிக்க1,650 ஆசிரியர்களைக் கொண்ட பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன.
வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
இம்மாத கடைசி வரை பிளஸ் டூ தேர்வுகள் நடைபெறவுள்ளன.












Click it and Unblock the Notifications