2 இலங்கை அகதிகள் குறித்து விளக்கம் தர சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
செங்கல்பட்டு அகதிகள் முகாமில் நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 2 அகதிகள் குறித்த விவரங்களைவழங்குமாறு சி.பி.ஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் பத்மநாபா மற்றும் ராஜீவ் காந்தி படுகொலைவழக்கில் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் அகதிகளான லிங்கம் மற்றும் வசந்தன் ஆகியஇருவரும் செங்கல்பட்டு அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நீண்ட காலமாக தங்களை அகதிகள் முகாமில் அடைத்து வைத்துள்ளதாகவும், தங்களை விடுதலை செய்துஇலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதாசிவம் மற்றும் நீதிபதி சிங்காரவேலன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இவர்கள்இருவரும் எதற்காக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர், இவர்கள் மீதுள்ள வழக்குகள் என்ன, இன்னும் எத்தனைவழக்குகள் உள்ளன, அவற்றின் விசாரணை நிலை ஆகியவற்றை வருகிற 16ம் தேதிக்குள் நீதிமன்றத்தில்அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு கூறி சி.பி.ஐக்கு உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications