For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்காளர்களுக்கு டிபன் பாக்ஸ்: தயாநிதி மீது அதிமுக புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆயிரம் விளக்கு பகுதியில் வாக்காளர்களைக் கவரும்வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினும், மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனும்எவர்சில்வர் தட்டுக்கள், டிபன் பாக்ஸ்களை வழங்கியதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் கொடுத்துள்ளது.

இதுதொடர்பான புகாரை பொதுப்பணித்துறை அமைச்சரும், அதிமுக தேர்தல் குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரில், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ளபெருமாள் முதலி தெரு, மாணிக்க மேஸ்திரி தெரு, ஆல்தோட்டம் ஆகிய இடங்களில் பொங்கல் விழா என்றபெயரில் எவர் சில்வர் தட்டு, டிபன் பாக்ஸ்களை ஸ்டாலினும், தயாநிதி மாறனும் வழங்கியுள்ளனர்.

பொங்கல் முடிந்து 2 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், அங்கு பொங்கல் விழா எதுவும் நடைபெறாதநிலையில், இப்படி பரிசுப் பொருட்களை வழங்குவது வாக்காளர்களை கவர லஞ்சம் கொடுப்பது போலாகும். இதுஅப்பட்டமான தேர்தல் விதி மீறலாகும்.

எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது மனுவில் கூறியுள்ளார்ஓ.பன்னீர் செல்வம்.

ஓட்டு வேட்டையில் டி.ஆர்.பாலு:

இந் நிலையில் திமுகவின் முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான தென் சென்னை தொகுதி வேட்பாளரானடி.ஆர்.பாலு சென்னை புறநகர்ப் பகுதியான ஆலந்தூர் பகுதியில் இன்று ஓட்டு வேட்டையில் இறங்கினார்.

அவருடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும்,தொண்டர்களும் உடன் சென்றனர். ஆலந்தூர் தவிர ஆதம்பாக்கம்பகுதியிலும் அவர் ஓட்டு வேட்டையாடினார். இங்கு மதிமுக நிர்வாகிகளும் அவருடன் பிரசாரத்தில் கலந்துகொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X