கரூர் அருகே சுவர் இடிந்து விழுந்து 2 சிறுவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கரூர்:
கரூர் அருகே வேலாயுதம்பாளையம் என்ற இடத்தில் சுவர் இடிந்து விழுந்த 2 சிறுவர்கள் பலியானார்கள்.
வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது வீட்டுச் சுற்றுச் சுவர் அருகே அவரது மகன் சந்திரமோகன்மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சம்பத் ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென காம்புவுண்டு சுவர் இடிந்து சிறுவர்கள் மீது விழுந்தது. இதில் இருவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்ட பொதுமக்கள் இருவரையும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே சந்திரமோகன் இறந்து விட்டான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபலனளிக்காமல் சம்பத்தும் இறந்தான்.












Click it and Unblock the Notifications