சரக்கு விமானத்தின் டயர் வெடித்தது, சென்னையில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது சரக்கு விமானத்தின் டயர் வெடித்ததால் பெரும் பரபரப்புஏற்பட்டது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்தில்தரையிறங்கியது. அப்போது விமானத்தின் டயர்கள் வெடித்ததால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில்இருந்த எட்டு சிக்னல் கம்பங்களை தகர்த்து விட்டு நின்றது.

இந்த விபத்தால் விமானத்தின் ஒரு பகுதி லேசான சேதமடைந்தது. வேறு விபரீதம் எதுவும் நேரவில்லை.உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் அவசரமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பான பகுதிக்குக்கொண்டு சென்று விட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களில் இதுபோல விபத்து நடப்பது 3வது முறையாகும்.சனிக்கிழமை ரியாத் நகரிலிருந்து சென்னை வந்த செளதி அரேபிய விமானம் தரையிறங்கும்போது விபத்தில்சிக்கியது. விமானத்தின் இடது மற்றும் வலதுபுற இறக்கைகள் மற்றும் டயர்கள் இதில் சேதமடைந்தன.அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த 102 பயணிகளும் பத்திரமாக உயிர் தப்பினர்.

அதேபோல, கடந்த திங்கள்கிழமையன்று தாய்லாந்து விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு இறங்கி விட்டது.அப்போதும் அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+