பயங்கர தாக்குதல் திட்டம்: ரெளடிகள் கைது- வெடிகுண்டுகள் பறிமுதல்
சென்னை:
சென்னையில் ரெளடி கோஷ்டியிடமிருந்து 7 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். எதிர்கோஷ்டி மீது இந்தக் கும்பல் பயங்கர தாக்குதலுக்குத் தயாராகி வந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தென்னவன். அதே பகுதியைச் சேர்ந்தவர் பில்லா. இருவருமேபயங்கர ரெளடிகள். இவர்களுக்கிடையே கடந்த மாதம் பெரும் கோஷ்டி மோதல் வெடித்தது. இதையடுத்து இருதரப்பினரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் தென்னவன் கும்பலைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கொடுத்த தகவலின் பேரில், கன்னிகாபுரத்தைச் சேர்ந்ததென்னவனின் தம்பி சரவணனின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 7 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின. பில்லா கோஷ்டியைச்சேர்ந்தவர்களைத் தாக்க இந்த வெடிகுண்டுகள் தயார் செய்யப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
சில நாட்களில் இந்தத் தாக்குதலை நடத்த தென்னவன் கோஷ்டி தயாராகி வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து சரவணன், கருப்பு சரவணன், கார்த்திக் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
தென்னவன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications