மதுரை உயர் நீதிமன்ற கிளை தொடக்க விழாவில் சிக்கல்
மதுரை:
நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, மதுரையில் தொடங்கப்படவுள்ள உயர் நீதிமன்றக்கிளை திறப்பு விழாவை மிகவும் எளிமையாக நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரையில் ரூ. 50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உயர் நீதிமன்றக் கிளை கட்டடம் ஏப்ரல் 13ம் தேதிதிறக்கப்படவுள்ளது. தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கனவான உயர் நீதிமன்றக் கிளை கட்டடத் திறப்புவிழாவை பிரமாண்டமாக நடத்த நீதித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை நடந்திராத வகையில் சிறப்பாக நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. முதல்வர்ஜெயலலிதா உள்ளிட்ட விவிஐபிக்களையும் நிகழ்ச்சிக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் குறுக்கிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில்உள்ளதால், ஆட்சியாளர்களை வைத்து விழா நடத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தின் விதிமுறையில்கூறப்பட்டுள்ளது. இதனால் விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக மத்திய, மாநில அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ள முடியாது. ஆனால்முதல்வரோ அல்லது அமைச்சர்களோ இல்லாமல் விழாவை நடத்த நீதித்துறை தயக்கம் காட்டுகிறது. இதனால்திட்டமிட்டபடி ஏப்ரல் 13ம் திறப்பு விழா நடைபெறுமா அல்லது தேர்தலுக்குப் பிறகு தள்ளி வைக்கப்படுமா என்பதுகுறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது.
கடந்த 2000மாவது ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி மதுரை உலகனேரியில் ரூ. 50 கோடி செலவிலானஉயர் நீதிமன்றக் கிளைக்கு அடிக்கல் நாட்டினார். 62 ஏக்கர் பரப்பளவில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை அதி நவீனவசதிகளுடன் தயாராகி உள்ளது. மிகுந்த அழகுடன் கிளைக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் நீதிபதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளார்கள். நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து இங்கு இடமாற்றம் செய்யப்படுவர். 5 நீதிபதிகளுடன் மதுரை உயர் நீதிமன்றம் செயல்படும்என்று ஏற்கனவே தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி அறிவித்துள்ளார்.