மதுரை: வகுப்பறையில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த மதுரை மாணவி வகுப்பறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை பொன்னகரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்10ம் வகுப்புப் படித்து வந்தவர் சத்யா.அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளையொட்டி பள்ளியில் சிறப்பு வகுப்புகள்நடத்தி வருகின்றனர்.
நேற்று சிறப்பு வகுப்புக்கு வந்திருந்த சத்யாவை ஆசிரியை திட்டியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த சத்யா,பிற மாணவிகள் அனைவரும் வீடு திரும்பிய பின்னர் வகுப்பறையிலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications