புன்னைநல்லூர் பால்காவடி விழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே உள்ள புகழ் பெற்ற புன்னைநல்லூர் மகா மாரியம்மன் கோவிலில் பங்குனி பால் காவடி விழாஇன்று வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி எடுத்து வந்து அம்மனுக்குஅபிஷேகம் செய்தனர்.
இக் கோவிலில் பங்குனி மாத பால் காவடி திருவிழா மிக பிரசித்தமானது. இன்று அந்த வினா நடந்தது.. தஞ்சைசிவகங்கை பூங்காவிலிருந்து 2,000 பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடங்கள்,காவடிகளையைச் சுமந்தபடி கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக கோவிலுக்கு வந்த அவர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.பின்னர் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications