இதில் ஆச்சரியம் ஏதுமில்லை: பா.ம.க

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாமக போட்டியிடுகிற 6 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியை ஆதரிக்கப் போவதாக ரஜினி ரசிகர் மன்றத்தலைவர் சத்தியநாராயணா அறிவித்துள்ளதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று பாமக தலைவர்ஜி.கே.மணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

அதிமுகவின் தூண்டுதலினால் இதுவரையில் மறைமுகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போதுபகிரங்கமாக அதனை அறிவித்திருக்கிறார்கள்.

தேர்தலில் யாரும் யாரையும் ஆதரிக்கலாம். ஜனநாயகம் அத்தகைய உரிமையை வழங்கியுள்ளது. ஒரேகுடும்பத்திலேயே ஒருவரையொருவர் எதிர்த்துக் கொண்டிருக்கும் காலம் இது.

எனவே இந்த அறிவிப்பைக் கண்டு பாமக தொண்டர்கள் அதிர்ச்சி அடையப்போவது இல்லை. இதுபோன்றஎதிர்ப்புகள் அவர்களை இன்னும் உற்சாகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான அலை வீசுகிறது. 39 தொகுதிகளில் 34-ல் அதிமுக- பா.ஜ.ககூட்டணி படுதோல்வி அடையும் என்று வெளிவந்துள்ள கருத்துக் கணிப்பு அந்தக் கூட்டணியை ஆட்டம் காணவைத்திருக்கிறது.

எனவே தான் ஆட்களைத் தேடிப்பிடித்து எங்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு இப்படியெல்லாம் செய்திகளைப்பரப்புகிறார்கள். இப்படிப்பட்ட செய்திகள் மூலம் மக்களை திசை திருப்பி விடலாம் என்று கருதுகிறார்கள்.

பாமக தொண்டர்களும், ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தொண்டர்களும் எத்தகையஆத்திரமூட்டலுக்கும் இடம் கொடுக்காமல் ஜனநாயக வழியில் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+