ஜெ. கூட்டத்தில் மன்றக் கொடிகளுடன் திரண்ட ரஜினி ரசிகர்கள்
காஞ்சிபுரம்:
ஜெயலலிதா பேசிய பொதுக் கூட்டத்தில் ஏராளமான ரஜினி ரசிர்கள் தங்களது மன்றக் கொடிகளுடன்கலந்து கொண்டனர்.
ஜெயலலிதாவை ஒரு காலத்தில் கடுமையாக விமர்சித்து, எதிர்த்தவர் ரஜினிகாந்த். ஜெயலலிதாஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று சாபம் விட்டவர்ரஜினி.
ஆனால் இப்போது டாக்டர் ராமதாஸை பழிவாங்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகஅதிமுகவுக்கும், பாஜகவுக்கும் 6 தொகுதிகளில் ஆதரவு தருவதாக ரஜினி அறிவித்துள்ளார். இதைஒரு பிரிவு ரசிகர்களால் ஜீரணிக்க முடியாவிட்டாலும் இன்னொரு பகுதியினர் இந்த அறிவிப்பால்பெரு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிருப்பாக்கம் அருகே நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில்ஜெயலலிதா பேசினார். இக் கூட்டத்திற்கு ஏராளமான ரஜினி ரசிகர்கள், மன்றக் கொடிகளுடன் வந்துகளை கட்டினர்.
ஜெயலலிதாவின் பிரச்சாரங்களுக்கு கூட்டமே வராததால் மனம் வெதும்பிப் போயிருந்தஅதிமுகவினருக்கு ரஜினி ரசிகர்களின் ஆதரவு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
அதிமுகவினருக்கு சமமான எண்ணிக்கையில், ரஜினி ரசிகர்களும் இருந்ததால் அப் பகுதியினர்மத்தியில் பெரும் ஆச்சரியம் நிலவியது.












Click it and Unblock the Notifications