சென்னை வந்தார் தமிழக தேர்தல் சிறப்பு பார்வையாளர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக தேர்தல் பணிகள், விதிமீறல்களைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணைய சிறப்புப்பார்வையாளர் டி.கே.பாசு நேற்று சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஏற்பாடுகளை முழுமையாகபார்வையிடவுள்ளேன். தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 25 தொகுதிகள் பதற்றம் நிறைந்தவைஎன்று அடையாளம் காணப்பட்டுள்ளன.
அந்தத் தொகுதிகளுக்கு நேரில் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யவுள்ளேன்.
தேர்தல் நடத்தை விதிமீறல்கள் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து என்னிடம் புகார் தரலாம் என்றார் பாசு.












Click it and Unblock the Notifications