ராபின் மெயின் வழக்கு: காளிமுத்துவின் விடுதலை ரத்து- நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராபின் மெயின் வழக்கில் இருந்து சபாநாயகர் காளிமுத்துவை விடுவித்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து அவர் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும்உத்தரவிட்டுள்ளது.

1984-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் காளிமுத்து வேளாண்மைத் துறைஅமைச்சராக இருந்தார். அப்போது தன்னுடைய செல்ஜாக்கைப் பயன்படுத்தி 8 வங்கிகளில், பழைய வாகனங்களைவாங்குவதற்காக ராபின் மெயின் என்பவருக்கு ரூ. 56 லட்சம் கடன் வாங்கித் தந்தார்.

இதற்காக அந்த 8 வங்கி மேலாளர்களை காளிமுத்து தொடர்புகொண்டு, தனது கட்டுப்பாட்டில் உள்ள வேளாண்மைவிற்பனை வாரியத்தின் நிதியில் இருந்து பெருமளவு தொகையை வங்கிகளில் முதலீடு செய்வதாகவும் அதற்குப்பிரதி உபகாரமாக ராபின் மெயினுக்குக் கடன் வழங்க வேண்டும் என்றும் மிரட்டினார். இதையடுத்து வங்கிஅதிகாரிகள் பணிந்தனர்.

மேலும் கடனைப் பெறுவதற்காக ராபின் மெயின் ஏகப்பட்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தியிருந்தார். இந்தவிவகாரம் பெரிய சர்ச்சையாக உருவெடுத்ததையடுத்து காளிமுத்து மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்திய தண்டனைச் சட்டம் 120பி, 420 ஆகிய பிரிவுகளில் ராபின் மெயின் மற்றும் காளிமுத்து மீது சிபிஐ வழக்குத்தொடர்ந்தது.

ஆனால், அரசு ஊழியராக (அமைச்சராக) இருப்பதால் தன் மீது வழக்குத் தொடர உரிய அதிகாரிகளின் அனுமதிதேவையென்றும், அதைப் பெறாமலேயே வழக்குப் பதிவு செய்யப்படுள்ளதால், தன்னை இந்த வழக்கில் இருந்துவிடுவிக்கும்படி காளிமுத்து சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட சிபிஐ நீதிமன்றம் காளிமுத்துவை வழக்கில் இருந்து விடுவித்தது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. முக்கிய குற்றவாளியானகாளிமுத்துவை இந்த வழக்கில் இருந்து விடுவித்தது செல்லாது என்று தனது மனுவில் சிபிஐ கூறியிருந்தது. இந்தவழக்கு விசாரணை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந் நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி அசோக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிஅசோக்குமார் தனது தீர்ப்பில் கூறியதாவது:

யாருக்கோ கடன் வாங்கித் தர நேரடியாகவோ தனிச் செயலர் மூலமாகவோ வங்கி அதிகாரிகளிடம் பேசுவது ஒருஅமைச்சரின் வேலை அல்ல.

இத்தகைய நடவடிக்கைகள் ஒரு அரசு ஊழியருக்கு அழகல்ல. குற்றம் சாட்டப்பட்ட காளிமுத்து தனதுகடமைகளுக்குத் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபட்டாரா அல்லது இந்த வழக்கு கற்பனையானதா என்பதைவிசாரணை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்.

வழக்கு தொடரப்பட்டபோது காளிமுத்து அரசு ஊழியராக இல்லை. இதனால் அவர் மீது வழக்கு தொடர்வதற்கு,எந்த அதிகாரியிடமும் சிபிஐ அனுமதி பெறத் தேவையில்லை. எனவே காளிமுத்துவை விடுவித்து விசாரணைநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்கிறேன்.

வழக்கு விசாரணைக்காக காளிமுத்து ஏப்ரல் 16-ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தீர்ப்புகூறினார்.

காளிமுத்து மீது இந்த விவகாரம் தவிர, மதுரை அரசரடி எஸ்.எஸ். காலனி பகுதியில் அரசு நிலத்தை சுருட்டியதுஉள்ளிட்ட புகார்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+