எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்கின
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின.
பிளஸ் டூ தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தன. இதைத் தொடர்ந்து இன்று முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள்தொடங்கின.
6,79,149 மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். தனித் தேர்வர்களையும் சேர்த்து மொத்தம்7,38,709 மாணவ மாணவியர் பரீட்சை எழுதவுள்ளனர்.
இது தவிர 89,033 மெட்குலேஷன் மாணவ, மாணவியரும் தேர்வெழுதுகின்றனர்.
தேர்வில் காப்பி அடிப்பதைத் தடுக்க 65 கல்வி மாவட்டங்களிலும் தலா 30 அதிகாரிகள், ஆசிரியர்களைக்கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications