விவகாரத்து பெற்றார் "புதிரா புனிதமா" ஷர்மிளா
சென்னை:
நடிகை சீதா-பார்த்திபனைத் தொடர்ந்து புதிரா புனிதமா நிகழ்ச்சி புகழ் டாக்டர் ஷர்மிளாவும் தனது கணவரிடம்இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.
இது விவாகரத்து வாரம் போலும். புதன்கிழமைதான் இயக்குனர், நடிகர் பார்த்திபன், அவரது மனைவி சீதாவுக்குசென்னை நீதிமன்றம் விவாகரத்து அளித்தது. அதே நாளில் விவகாரத்து கோரியுள்ள நடிகை சுகன்யாவும்,குலுக்கல் நடிகை பாபிலோனாவும் வழக்குக்காக நீதிமன்றம் வந்து போனார்கள்.
இந் நிலையில் நேற்று டாக்டர் ஷர்மிளாவுக்கும் விவாகரத்து கிடைத்துள்ளது.
விஜய் டிவியில் வெளியான புதிரா புனிதமா நிகழ்ச்சி மூலம் செக்ஸ் தொடர்பான கேள்விகளை டாக்டர்மாத்ருபூதத்திடம் முகம் சுளிக்காமல் கேட்டு ரசிகர்களை கவர்ந்தவர் ஷர்மிளா. பின்னர் டிவி சீயல்களில் நடிக்கத்தொடங்கினார்.
செக்ஸ் டாக்டர் பிரகாஷ் பிடிபட்டபோது, அவரது ஆபாச சிடிக்களில் ஷர்மிளாவும் இடம் பெற்றுள்ளதாக பரபரப்புசெய்திகள் அடிபட்டது.
இந் நிலையில் அவருக்கும் டிவி நிகழ்ச்சித் தயாப்பாளர் மோகனுக்கும் காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது.அதே வேகத்தில் இருவரும் பிரிந்தனர்.
புளு பிலிம் விஷயத்தில் தன்னைக் கணவர் மோகன் சந்தேகப்படுவதாகவும், செக்ஸ் டாக்டர் பிரகாஷின் ஆபாசசிடிக்களில் நடித்துள்ளாயா என்று கேட்டு துன்புறுத்துவதாகவும் கணவர் மீது புகார் கொடுத்தார் ஷர்மிளா.
பின்னர் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தார்.
வியாழக்கிழமை ஷர்மிளா மற்றும் மோகன் இருவரும் குடும்ப நீதிமன்றத்திற்கு வந்தனர். அவர்களிடம் நீதிபதிமுத்துச்சாமி விசாரணை நடத்தினார். பின்னர் இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார்.
டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த இளமை புதுமை நிகழ்ச்சி புகழ் சொர்ணமால்யாவும் விவாகரத்து கோரிவிரைவில் கோர்ட் படியேறுவார் என்று தெரிகிறது. தனது அமெரிக்கக் கணவரின் வீட்டில் தன்னிடம் பணம்கேட்டு தொல்லைப்படுத்துவதாக சொர்ணமால்யா புகார் கூறியுள்ளார்.
ஆனால், சொர்ணமால்யாவின் சினிமா தொடர்புகளும் ஆட்டமுமே பிரச்சனைக்குக் காரணம் என்கிறதுஅவரது கணவர் வட்டாரம்.












Click it and Unblock the Notifications