சென்னை திரும்பினார் ரஜினி: நாளை மனம் திறக்கிறார்
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு சென்னை திரும்பினார். நாளை அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.
கடந்த சில வாரங்களாக தனது சொந்த மாநிலமான கர்நாடகத்தில் உள்ள சிருங்கேரி மடத்தில் தங்கியிருந்தார்அவர். இந் நிலையில் மதுரையில் பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு அவரது ரசிகர்கள் கருப்புக் கொடி காட்டியதால்மோதல் ஏற்பட்டது.
ரசிகர்களை பா.ம.கவினர் கடுமையாகத் தாக்கினர். இதைக் கண்டித்து சிருங்கேரியில் இருந்து அறிக்கை விட்டரஜினி, விரைவில் சென்னை திரும்பி மனம் திறக்கப் போவதாகக் கூறியிருந்தார்.
இதோ வருகிறார்.. அதோ வருகிறார் என்று பெரும் இழுத்தடிப்புக்குப் பின் நேற்றிரவு அவர் பெங்களூரில் இருந்துவிமானம் மூலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் நிருபர்கள் அவரிடம் கேள்வி கேட்க முயன்றபோது,நான் உங்களை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
வலியப் போய் ஆதரவு தரும் தனது ரசிகர்களை ஊக்குவிக்காமல் அதிமுகவினரும், முதல்வர் ஜெயலலிதாவுக்குப்பயந்து பா.ஜ.கவும் கேவலமாக நடத்தி வருவதால் ரஜினி மனம் புண்பட்டுப் போயிருப்பதாகத் தெரிகிறது.
இதனால் அவரிடம் இருந்து நாளை ஏதாவது புதிய அதிரடி அறிவிப்பு வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications