தர்மபுரியில் திமுகவினர் மீது அதிமுகவினர் தாக்குதல்
தர்மபுரி:
தர்மபுரியில் திமுக தலைவர் கருணாநிதியின் பேச்சைக் கேட்பதற்காக வந்த திமுக தொண்டர்களை,அதிமுகவினர்தாக்கியதால் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக தலைவர் கருணாநிதி தர்மபுரி வள்ளலார் மைதானத்தில் உரையாற்றினார். கருணாநிதியின் பேச்சைக்கேட்பதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மைதானத்தில் திரண்டனர். அவர்களில் சிலர், மைதானத்தைச்சுற்றிலும் எழுதப்பட்டிருந்த அதிமுக தேர்தல் வாசகங்களை அழித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அவர்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் திமுக தொண்டர்கள்சிலர் சரமாரியாகத் தாக்கப்பட்டனர். உடனடியாக போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் கலைந்து போகச்செய்தனர்.
இருப்பினும் திமுக தொண்டர்களைத் தாக்கிய அதிமுகவினரைக் கைது செய்யக் கோரி முன்னாள் திமுக அமைச்சர்முல்லைவேந்தன் தலைமையில் சேலம் சாலையில், நூற்றுக்கணக்கான திமுகவினர் சாலை மறியல் செய்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் சித்திக், காவல்துறைக் கண்காணிப்பாளர் பெரியய்யா உள்ளிட்டோர் விரைந்து சென்றுமுல்லைவேந்தனை சமாதானப்படுத்தி அனைவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications