சிறுபான்மையினரை மிரட்டவே பொடா: சு.சுவாமி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

சிறுபான்மை சமூக மக்களை மிரட்டும் விதமாகவே பொடா சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜனதாக் கட்சித்தலைவர் சுப்ரமணியம் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வெளிநாட்டில் உள்ள தீவிரவாதிகளுக்கு ஆதரவாகசெயல்படுவோருக்கு எதிராக பொடா சட்டத்தைப் பயன்படுத்த அந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரவில்லை. மாறாக இங்குள்ள சிறுபான்மை சமூக மக்களை மிரட்டுவதற்காகவே கொண்டு வந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவும் இதே காரணத்திற்காகவே பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்.இப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான வழக்கில் அவர் சிக்கலில் மாட்டியுள்ளார். அவருக்குஇப்போது இரண்டே வழிகள்தான் உள்ளன.

ஒன்று பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் அல்லது அட்டார்னி ஜெனரல் சோலி சொரப்ஜிராஜினாமா செய்யக் கோர வேண்டும்.

பெரியகுளம் அதிமுக வேட்பாளர் டி.டி.வி. தினகரனுக்கு சிங்கப்பூர் குடியுரிமை உள்ளது. இந் நிலையில் அவரதுபெயரை இந்திய வாக்காளர் பட்டியலில் இடம் பெற வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே உடனடியாகதினகரன் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்காவிட்டால் தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிராக வழக்குதொடருவேன் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+