தினசரி வசூல் ரூ. 20,000 இல்லாத டாஸ்மாக் கடைகள் மூடல்
Subscribe to Oneindia Tamil
கோவை:
தினசரி ரூ. 20,000க்கும் குறைவான வசூல் கொண்ட மதுக் கடைகளை மூடி விட டாஸ்மாக் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
தமிழக அரசே தற்போது மதுக் கடைகளை எடுத்து நடத்தி வருகிறது. அரசின் டாஸ்மாக் நிறுவனம் இந்த மதுவிற்பனையை நடத்தி வருகிறது. அரசு டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு பணியாளர்களையும் அரேச நியமித்துள்ளது.
இந் நிலையில் வசூலை அதிகப்படுத்தும் விதத்தில் சில நடவடிக்கைகளை டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.தினசரி வசூல் ரூ. 20,000க்கு மேல் இருக்க வேண்டும், அப்படி இல்லாத கடைகளை மூடி விட அரசு முடிவுசெய்துள்ளது.
முதல் கட்டமாக கோவையில் 25 டாஸ்மாக் கடைகளை அரசு மூடி விட்டது. இந்தக் கடைகளில் பணியாற்றி வந்தஊழியர்கள் வேறு கடைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுபோல வசூல் குறைவாக உள்ளகடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications